Saturday, January 26, 2013

விஸ்வ‌ரூப‌ம் திரைப்ப‌ட‌த்தை இந்தியா முழுவ‌தும் த‌டை செய்ய‌ ம‌த்திய‌ அர‌சை வ‌லியுறுத்துவோம்! இ.யூ.முஸ்லீம் லீக் நிர்வாகி அறிக்கை!


                               கீழ‌க்க‌ரை ஹ‌மீது ர‌ஹ்மான்


அப்துல் ர‌ஹ‌மான்.எம்.பி
இந்திய‌ யூனிய‌ன் முஸ்லீம் லீக் நிர்வாகிக‌ளில் ஒருவ‌ரான‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீது ர‌ஹ்மான் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில்,

முஸ்லிம் ச‌முதாய‌த்தை தவ‌றாக‌ சித்த‌ரிக்கும்‌ வ‌கையில் த‌யாரிக்க‌ப்ப‌ட்டு இருப்ப‌தாக‌ கூற‌ப்ப‌டும் விஸ்வ‌ரூப‌ம்  திரைப்ப‌டைத்தை முஸ்லீம் லீக் த‌லைமையின் முய‌ற்சியின் மூல‌ம்   நேற்று மதியம் தமிழ்நாட்டில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் கேரளா மாநில நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அங்கேயும் தடை விதிக்க கேட்டுக் கொண்டனர். உடனடியாக இதை மாநில முதல்வர் உம்மன்சாண்டி கவனத்திற்கு எடுத்து சென்ற அம்மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அன்று நேற்று இரவு கேரள முதல்வர்,உள்துறை அமைச்சர்,தலைமைச் செயலாளர்,ஆகியோருடன் அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி,ஈ.டி.பஷீர் எம்.பி.,ஆகியோர் அலோசனை நடத்தினர்..கேர‌ளாவில் த‌டை செய்ய வ‌லியுறுத்திய‌து போன்று போன்று "விஸ்வ‌ரூப‌ம்" திரைப்ப‌ட‌த்தை இந்தியா முழுவ‌தும் த‌டை செய்ய‌ ம‌த்திய‌ அர‌சை வ‌லியுறுத்துவோம்..இது குறித்து ந‌ம‌து த‌லைவ‌ர்க‌ளில் ஒருவரான‌ அப்துல் ர‌ஹ‌மான்.எம்.பி அவ‌ர்க‌ள் க‌ருத்தை உங்க‌ள் பார்வைக்கு வைக்கிறேன்.

  முஸ்லிம்களின் உயிர் மூச்சான புனித குர்ஆனையும்,தீவிரவாத போக்கினையும் இணைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமே தீவிர வாதத்துக்கு துணை நிறகக்கூடியதைப் போன்ற காட்சிகளையே பரவலாகக் கொண்டிருக்கும் விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் லீக் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கின்றது.

 நம்முடைய எதிர்ப்பை மிக அழுத்தமாக தெரிவிக்கும் பொருட்டு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் திர்.ராஜகோபால் அவர்களை தொடர்பு கொண்டு நம்முடைய கண்டனத்தை தெரிவித்திருக்கின்றோம்.சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை தெரிவித்திருக்கின்றன.தமிழக அரசு 15 நாட்களுக்கு தடை விதித்திருப்பது சற்று ஆறுதலை தந்தாலும்,இந்த படத்தை வெளியிடாமல் முற்றுலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே முஸ்லிம் லீகின் நிலைபாடு வருகிற 28-ம் தேதி வெளியிடப்ப்ட இருக்கின்ற நீதிமன்ற தீர்ப்பும் இதே அடிப்படையிலான நியாமுள்ள தீர்ப்பாக இருக்குமென எதிர்பார்க்கின்றோம்.
இந்த திரைப்படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு நிச்சயமாக கெடும் என்கிற அச்சப்பாடு நிலவி வருவதை அரசாங்கமும் நீதிமன்றமும் கருத்தில் கொள்வது இன்றியமையாதது.திரைப்படங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மாத்திரமல்ல எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருக்கக் கூடாது.என்கிற முஸ்லிம் லீகின் நிலையை எல்லாத் தளங்களிலும் பதிவு செய்தே வருகிறோம்.

மதமாச்சரியம் இல்லாமல் திரைப்படங்களை தயாரிப்பவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வரையரையை  மீறிய காரணத்தினால் தான் விஸ்வரூபம் படம் கடும் எதிர்ப்பினை சந்தித்திருக்கிறது.இந்த எதிர்ப்பு தார்மீக நிலையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தினால் தான் தமிழக அரசும் உடனடியாக 15 நாட்கள் தடை விதிக்க முன் வந்திருக்கிறது.
இந்தத் தடை தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமானதாக ஆக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடிய சூழ்நிலையைஉண்டாக்கி விடுமோ என்கிற அச்சம் நிலவுவதை மறுப்பதற்கில்லை,ஆகவே அரசாங்கமும் நீதிமன்றமும் மக்களிம் உணர்வுகளை மதித்து விஸ்வரூபம் படத்தை தடை செய்வதில் எந்த தயவு தாட்சண்யும் காட்டக்கூடாது என்பதை மாத்திரம் இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

2 comments:

  1. சமுதாயத்தின் எண்ணங்களை என்றுமே நேர்மையான வழியில் வெளிப்படுத்தும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதை இந்த அறிக்கை நிரூபித்துக் கொண்டுள்ளது .

    ReplyDelete
  2. முஸ்லிம் லீக் சென்சார்போர்டில் முஸ்லிம்களை உறுப்பினராக்க முயற்ச்சி செய்ய வேண்டும் ......அப்போதுதான் படத்தை தடை செய்ய நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.