Saturday, December 1, 2012

கீழ‌க்க‌ரை பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழா


கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு வாரவிழா, கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா, நேருயுவ கேந்திரா நிறுவன நாள் ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார், நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் முன்னிலை வகித்தனர், சமூக மேம்பாட்டு பணிகள் திட்ட உள் ஒருங்கிணைப்பாளர் யோசுவா வரவேற்றார்,

நேருயுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பபாளர் சதாசிவம் பேசினார், விழாவில் ஓவியப்போட்டி, கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி கோவிந்தன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.