Monday, December 17, 2012

கீழக்கரை ப‌ள்ளிக‌ளில் விளையாட்டு போட்டிக‌ள்!மாண‌வ‌ர்க‌ள் ப‌ரிசு பெற்ற‌ன‌ர்!


கீழக்கரை கிழக்குத்தெரு கைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி தாளாளர் செய் யது இபுராகிம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர் சுந்தரமூர்த்தி, சிறப்பு ஆசிரியர் ஜீவா, கைரத்துல்ஜலாலியா மேல்நிலைப்பள்ளி முன்னாள் தாளாளர் கரீம், மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹசீனா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஆசிரியர் இபுராகிம்சா நன்றி கூறினார். ஏற்பாடு களை உதவி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கீழக்கரை தெற்குத் தெரு இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் அனை வருக்கும் கல்வி இயக்கத்திட்டம் சார்பில் நடை பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான உள்ளடங்கிய விளையாட்டு போட்டியில் தாளாளர் முகைதீன் இபுராகிம் தலைமை வகித் தார். தலைமை ஆசிரியர் தனலெட்சுமி வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்த் தோ நன்றி கூறினார், ஏற்பாடுகளை ஆசிரியர் தாஹா ரசூல் மற்றும் ஆசியர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.