Friday, December 7, 2012

கீழக்கரை சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினிரிங் கல்லூரி ம‌ற்றும் தமிழக அரசு தகவல் தொடர்பு தொழில் நுட்பம் சார்பில், வேலை வாய்ப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம், தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமையில், தாளாளர் யூசுப் சாகிப், இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலையில் நடந்தது.

எதிர் காலத்தில் தொழில் சார்ந்த வேலைவாய்ப்பை மிகைப்படைய செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் முகம்மது ஜகாபர் கையெழுத்திட்டு ஐ.சி.டி., அகாடமி மேலாளர் பூர்ணபிரகாஷிடம் வழங்கினார்.

முதல்வர் கூறுகையில், ""ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த வேலை வாய்ப்பும், பயிற்சியும் கிடைக்கும். பேராசிரியர்களுக்கும் புதிய தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படும். இதன் பொறுப்பாளராக‌ லட்சுமிகாந்தன் பாரதி செயல்ப‌டுவார்' என்றார்.



 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.