Thursday, December 27, 2012

கீழ‌க்க‌ரை ம‌ற்றும் சுற்றுப்புற ப‌குதிக‌ளில் ம‌ழை!

ப‌ழைய‌(பைல்) ப‌ட‌ம்

வ‌ங்க‌ க‌ட‌லில் இல‌ங்கை அருகே குறைந்த‌ காற்ற‌ழுத்த‌ தாழ்வு நிலை க‌டந்த‌ ஒரு வார‌மாக நிலை கொண்டுள்ள‌து அத‌ன் கார‌ண‌மாக‌ த‌மிழ்நாடு முழுவ‌தும் உள்ள‌ க‌டற்க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் குறிப்பாக‌ ராம‌நாத‌புர‌ம்,க‌ன்னியாக்கும‌ரி உள்ளிட்ட‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய வாய்ப்புள்ள‌தாக‌வும் இம்ம‌ழை 29ந்தேதி வ‌ரை நீடிக்கலாம் என‌ வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் நேற்று இர‌விலிருந்து ம‌ழை பெய்து வ‌ருகிற‌து.ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் டெங்கு,மலேரியா போன்ற‌ நோய்க‌ளால் பொதும‌க்க‌ள் பாதிப்புக்கு உள்ளாகும்  சூழ்நிலையில் த‌ற்போது ம‌ழைநீர் தேக்க‌த்தினால் கொசுக்க‌ள் ப‌ர‌வும் வாய்ப்பு அதிக‌ம் என‌வே ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் முன்னெச்ச‌ரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ கொசு ம‌ருந்து தெளிப்பது,தேங்கிய‌ ம‌ழை நீரை அக‌ற்றுவ‌து போன்ற‌ சுகாதார‌ ப‌ணிக‌ளை விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.

 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்December 27, 2012 at 7:43 PM

    என்னமோ நினைத்தோம். என்னமோ நடந்து கொண்டிருக்கிறது.. ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதிகளிடையே உள் குத்து வேலை, சேம் ஸைடு கோல்.. பாழாய் போன தமிழக அரசு சட்டத்தால் ஒரு பெண்ணை தலைவராக தேர்ந்தெடுக்கூடிய கட்டாயத்திற்கு ஆட்பட்டோம். இதன் பயனாக அதிகம் பேசமுடியவில்லை. அது அவர்களுக்கு சாதகமாகிக் கொண்டு இருக்கிறது..வெட்கக் கேடு..இந்த பதவி தேவைதானா????? யோசித்து நல்ல முடிவு காணட்டும்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.