Wednesday, December 19, 2012

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் வ‌க்ப் வாரிய‌‌ த‌லைவ‌ர் தமிழ்ம‌க‌னுக்கு வ‌ர‌வேற்பு!


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு வருகை தந்த தமிழக வக்பு வாரிய தலை வர் தமிழ்மகன் உசேனுக்கு கல்லூரி வளாகத்தில் வரவேற்பு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முகம் மது ஜகாபர் தலைமை வகித்தார், கல்லூரி இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல் லா முன்னிலை வகித்தார், கணினித்துறை பேராசிரியர் சேக் யூசுப் வரவேற்றார்,

இதில் வக்புவாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் பேசுகையில், ‘தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே மரைன், கட்டிடக்கலை, வேதி யியல், ஏரோனாடிக்கல் போ ன்ற பாடபிரிவுகள் உள்ளன. பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள முகம்மது சதக் பொறியியல் கல்லூரி யில் இந்த பிரிவுகள் உள்ளது பெருமைப்பட வே ண்டிய விஷயம்’ என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஆனி முத்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல்கதரியா, அம்மா பேரவை செயலாளர் சரவணாபாலா ஜி, இளைஞரணி செ யலா ளர் இம்பாலா சுல்தான், மாணவரணி சுரேஷ், கீழக்கரை துணை செயலா ளர் குமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை மக்கள் தொடர்பாளர் நஜீமுதீன் மற்றும் துறைத்தலைவர் கார்த்திகேயன் செய்திருந்தனர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.