Monday, December 3, 2012

கீழ‌க்க‌ரை அருகே ந‌ட‌மாடும் இல‌வ‌ச‌ ம‌‌ருத்து‌வ‌ம‌னை தொட‌க்க‌ நிக‌ழ்ச்சி !


துபாய் இ.டி.ஏ நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிபவ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ரும் ச‌முதாய‌ ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை சார்பில் கீழ‌க்க‌ரை அருகே க‌ளிம‌ண்குண்டு கிராம‌த்தில் வேனில் செய‌ல்படும் இல‌வ‌ச‌ ந‌ட‌மாடும் மருத்துவ‌ம‌னை தொட‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்த‌ ம‌ருத்துவ‌ வாக‌ன‌த்தில் டாக்ட‌ர்,ந‌ர்ஸ்க‌ள்,ம‌ருந்தாளுன‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ள் கிராம‌புர‌ங்க‌ளில் சென்று ம‌ருத்துவ‌ ப‌ணிக‌ளில் ஈடுப‌டுவார்க‌ள்.
இத்திட்ட‌த்தின் தொட‌க்க‌ விழா இ.டி.ஏ நிறுவ‌ன‌த்தின் ம‌னித‌ வ‌ள‌ மேம்பாட்டுத்துறை நிர்வாக‌ இய‌க்குந‌ர் அக்ப‌ர்கான் த‌லைமையில் ந‌டைபெற்ற‌து.இ.டி.ஏ நிறுவ‌ன‌த்தின் த‌லைமை அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் மீரான் வ‌ர‌வேற்று பேசினார். ரோட்ட‌ரி ஆளுந‌ர் ஆறுமுக‌பான்டிய‌ன்,ச‌த‌க் ஜ‌லால் ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

திருப்புல்லானி யூனியன் தலைவ‌ர் ராஜேஸ்வ‌ரி,அதிமுக‌ முனியாண்டி, வாழ்த்தி பேசின‌ர்.

முன்னாள் அமைச்ச‌ர் அன்வ‌ர் ராஜா ந‌ட‌மாடும் ம‌ருத்துவ‌ம‌னையை கொடிய‌சைத்து தொட‌ங்கி வைத்தார். விழாவில் சே.மு.முக‌ம்ம‌து அலி,கீழ‌க்க‌ரை முன்னாள் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ப‌சீர்,பெரிய‌ப‌ட்டின‌ம் ஊராட்சி த‌லைவ‌ர் க‌பீர்,க‌ளிம‌ன்குண்டு க‌ருப்பையா,கீழ‌க்க‌ரை வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

ச‌முதாய‌ ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை நிர்வாகி பைசுர் ர‌ஹ்மான் ந‌ன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.