Monday, December 10, 2012

கீழ‌க்க‌ரை ப‌ள்ளியில் ம‌னித‌ உரிமை நாள் விழா!

உல‌க‌ மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று 10.12.12 கீழ‌க்க‌ரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை ப‌ள்ளி ம‌ற்றும் இஸ்லாமியா மேல்நிலைப்ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌ ம‌னித‌ உரிமைக‌ள் ப‌ற்றிய‌ பேச்சுப்போட்டி ம‌ற்றும் க‌ட்டுரை போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌து.

வெற்றி பெற்ற‌ மாண‌வ‌ மாணவிக‌ளுக்கு ப‌ள்ளி தாளாள‌ர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம்  ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்கினார். மெட்ரிக் ப‌ள்ளி முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜ‌ஸ்ட‌ஸ் ,த‌லைமை ஆசிரிய‌ர் ஜோச‌ப் சார்த்தோ,இஸ்லாமியா உய‌ர்நிலை ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் இர‌வி ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.