Friday, December 21, 2012

கீழ‌க்க‌ரையில் க‌த்தியை காட்டி 5ப‌வுன் செயின் ப‌றித்த‌தாக‌ 3பேர் கைது !

கீழக்க‌ரை ப‌ர‌த‌ர் தெருவில் வசிக்கும் கோம‌ஸ்(80) என்ற‌ மூதாட்டியிட‌ம் க‌த்தியை காட்டி 5 ப‌வுன் ந‌கையை ப‌றித்ததாக‌ மூன்று பேரை கீழ‌க்க‌ரை போலீசார் கைது செய்துள்ள‌ன‌ர்.

இது குறித்து ப‌ர‌த‌ர்தெரு பீட்ட‌ர் என்பவ‌ரின் ம‌னைவி ஸ்டெய்லி கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் கொடுத்த‌ புகாரில் கூறியிருப்ப‌தாவ‌து,
என‌து க‌ண‌வ‌ர் பீட்ட‌ரின் ம‌ருத்துவ‌ சிகிச்சைக்காக‌ ராமநாத‌புர‌ம் சென்றிருந்த‌ நேர‌ம் என‌து மாமியார் ஜாந்தார்க்மேரி கோம‌ஸ்(80) ம‌ட்டும் வீட்டில் த‌னியாக‌ இருந்தார்.

அப்போது அங்கு வ‌ந்த‌ மூன்று பேர் என‌து மாமியாரிட‌ம் குடிக்க‌ த‌ண்ணீர் கேட்டு பின்னாடியே சென்று க‌த்தியை காட்டி மிர‌ட்டி க‌ழுத்தில் கிட‌ந்த‌ 5 ப‌வுன் செயினை ப‌றித்து கொண்டு ஓடி விட்ட‌ன‌ர்.என‌ புகார் ம‌னு கொடுத்திருந்தார்.

இது குறித்து டி.எஸ்.பி சோம‌சேகர் உத்த‌ர‌வின் பேரில் இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் த‌லைமையில் எஸ்.ஐ செல்ல‌ம‌ணி உள்ப‌ட‌ தனிப்ப‌டை அமைத்து வ‌ழ‌க்கு ப‌திவு செய்து குற்ற‌வாளிக‌ளை தேடி வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் இக்குற்ற‌ச்செய‌லில் ஈடுப‌ட்ட‌தாக‌‌ கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌  ஸ்டாலின் ராஜா (18), முஹம்மதுகான் (18), அர்சத்நெய்னா (19) ஆகிய‌ மூன்று பேரை போலீசார் கைது செய்த‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.