Friday, May 13, 2011

ராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் !மீண்டும் நீரூபிக்கப்பட்டுளளது


ராமாநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் 15000த்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில் கூட்டணி கட்சியான அதிமுக தமிழகத்தில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தன் மூலம் ராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவர்களின் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் விபரம் :-
ஜவாஹிருல்லாஹ்(மமக) 65,831 ,

ஹசன் அலி (காங்) 50,074 ,

துரை கண்ணன்(பாஜக) 28,060.

ராஜா ஹுசைன்(இந்திய தேசிய லீக்) 3606

பைரோஸ்கான்(எஸ்டிபிஐ) 2731



மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் நிலவும் பெருபான்மையான மக்களின் கருத்தை ராமநாதபுரம் தொகுதி மக்கள் பிரதிபலிப்பார்கள் என்ற கருத்து நீண்ட நெடிய காலமாக நிலவி வருகிறது. இதற்கு காரணம் நடந்து முடிந்த எல்லா தேர்தல்களிலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சியே ஆட்சி அமைத்து வந்துள்ளது என்ற கரு்த்து உள்ளது.
பொதுவாக இது காலம் வரை ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏ. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்ததில்லை. இந்த தொகுதியின் எதிரொலிப்பு தமிழ்நாடு முழுவதும் பிரதிபலித்து வந்துள்ளது கடந்த கால தேர்தல்களின் வரலாற்று உண்மைகள் ஆகும். இதில் கடந்த 1952, 57, 62 ஆகிய பொதுத் தேர்தல்களில் ராமநாதபுரம் ராஜா சண்முகராஜேசுவர நாகநாத சேதுபதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் டி.ராமசாமியின் அண்ணன் தங்கப்பன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. ஆட்சி அமைத்தது. 1971ம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் வெற்றி பெற்றார். அப்போதும் திமுக ஆட்சி அமைந்தது. இதன் பின்பு 1977, 80, 84ம் வருட தேர்தல்களில் முன்னாள் டி.ராமசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். அந்த 3 தேர்தல்களிலும் அதிமுக ஆட்சி அமைந்தது.
இதன் பின்பு 1989ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். அப்போது திமு கழகம் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 1991ல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் வெற்றி பெற்றார். அதிமுக ஆடசி அமைத்தது. 1996ல் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர்ராஜா வெற்றி பெற்றார்.அப்போது அதிமுக ஆட்சி அமைந்தது. கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹசன்அலி வெற்றி பெற்றார்.காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில் அமர்ந்தது.
அதிமுக கூட்டணி கட்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற பேராசிரியர் ஜவாஹிருல்லா மூலம் தற்போது மீண்டும் ஒரு முறை அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


1 comment:

  1. சொந்த ஊர் மக்களை புறக்கணித்த திமிர் பிடித்த MLA வுக்கு ஊர் மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளார்கள்...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.