Sunday, April 1, 2012

தாசிம் பீவி கல்லூரியில் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம்!


கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தரமான கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஹபீப் நிஷா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டாளர் ரஜனி வரவேற்றார்.

திருச்சி ஜோச‌ப் க‌ல்லூரி ர‌சாய‌விய‌ல் இணை பேராசிரியர் அலெக்ஸ் ரமணி,சீதக்காதி அறக்கட்டளை துணை மேலாளர் சேக்தாவுத் துணை முதல்வர் நாதிரா பானு கமால் முன்னிலை வகித்தனர்.

இதில் கேரளாவை சேர்ந்த‌ விஞ்ஞான‌ம் ம‌ற்றும் தொழில்நுட்ப‌ துறை த‌லைமை செய‌லாளர் ராஜ‌சேக‌ர‌ன் பிள்ளை பேசியதில் ஒரு பகுதி,
தான் என்ற‌ அகாம்ப‌வ‌த்தை வெளியில் தூக்கி எறிந்தால் வாழ்கையில் வெற்றி பெறலாம்.குறைந்த‌ ம‌திப்பெண்க‌ள் பெறும் மாண‌விக‌ள் மீது ஆசிரிய‌ர்க‌ள் த‌னி க‌வ‌ன‌ம் செலுத்தி தோற்று விடுவோம் என்ற‌ எண்ண‌த்தை போக்கி வெற்றி பெறுவோம் என்ற‌ என்ற‌ நிணைப்பை மாண‌விய‌ரின் ம‌ன‌தில் விதைத்தால் க‌ண்டிப்பாக‌ அவ‌ர்க‌ள் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவ‌ர் பேசினார். பேராசிரிய‌ர் பாத்திமா ந‌ன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.