Thursday, April 5, 2012

விலையில்லா மிக்சி ,கிரைண்டர்,மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி !



கீழக்கரை அருகே தில்லையேந்த பஞ்சாயத்திற்குட்பட்ட கும்பிடுமதுரையில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கைத்தரி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சுந்தராஜன் பயனாளிகளுக்கு இலவச மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி வழங்கினார். நிகழ்ச்சிக்கு தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் முனியம்மாள் செல்வகுமார் தலைமை வகித்தார்.

அமைச்சர் சுந்தர்ராஜன் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு இந்த விலையில்ல பொருட்கள் முடிவு செய்யப்பட்டு தற்போது 30 ஆயிரத்து 320 நபர்களுக்கு வழங்கப்பட்டுளளது.மேலும் இலவச லேப்டாப் 3 ஆயிரத்து 205 மாணவர்களுக்கு வழங்கவதற்கு கணக்கெடுக்கப்பட்டு 2 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.