Monday, April 30, 2012

குப்பைகளை தாங்களே அகற்றிய அல் ஹிலால் சங்கத்தினர் ! நகராட்சி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு!






புது கிழக்குதெரு பட்டாணி அப்பா தர்ஹா பகுதியில் ஏராளமான குப்பைகளை குவிந்து கிடந்தது. நீண்ட காலமாக இப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் பல முறை நகராட்சியிடம் முறையிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி குப்பைகளை தாங்களே அகற்ற நேர்ந்ததாக அல் ஹிலால் சஙகத்தினர் தெரிவித்தனர்.

இப்பணியில் அச்சங்கத்தை சேர்ந்த செயலாளர் அப்துல் ஹாதி இணை செயலாளர் அப்பாஸ் ஆலிம் ,முகம்மது இஸ்ஹாக் ஆகியோர் தலைமையில் ஜகுபர் சாதிக்,ரஹம்த்துல்லா,அப்துல் ஹக்கீம்,சித்தீக் மரைக்கா,யூசுப் அன்சாரி,அபுதாஹிர்,மதார்ஷா ஆசாத் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


இது குறித்து அப்துல் ஹாதி மற்றும் அப்பாஸ் ஆலிம் ஆகியோர் கூறுகையில்,
பல முறை நகராட்சி நிர்வாகத்திடமும்,வெல்பேர் டிரஸ்ட் நிர்வாகிகளிடமும் எங்கள் பகுதி குப்பைகளை அகற்ற கோரிக்கை வைத்தோம் ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை வேண்டுமென்றே எங்கள் வார்டு புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறோம் இப்பகுதி மக்கள் வறுமைகோட்டுக்கு கீழுள்ளவர்கள் எனவே அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்கள் பகுதியை புறகணிக்க கூடாது என்றார்.

3 comments:

  1. Many wishes to Al Hilal...May Allah Guide you to Acheive your goal....!

    ReplyDelete
  2. my dear friends Rahmathullah,karunai,ansari and matharsha gooooooooog jop carrryyyyy onnnnnnnn god plessssssss uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  3. my dear RAhmathullah good jop carry onnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn,,,allah pless youuuuuuuuuuuu

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.