
பட விளக்கம் :-குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.
கிறிஸ்தவர்களின் குருத்தோலை தினத்தை முன்னிட்டு கீழக்கரை சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயத்தில் இருபெரும் விழா நடைபெற்றது.
சபைகுரு தேவதாஸ்ராஜன் பாபு தலைமை தாங்கினார்.சி.எஸ்.ஐ.ஆலயத்திலிருந்து கிறிஸ்தவர்கல் கையில் குருத்தோலை ஏந்தி "ஹொசனா" பாடியபடி ஊர்வலமாக கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை வழியாக ஆலயத்தை சென்றடைந்தனர்.
ஆலய ஆராதனை முடிந்தவுடன் புதிய குருமனை நிலைநாட்டும் விழா நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.