Friday, April 27, 2012

கீழக்கரை புதிய கடல் பாலத்தில் தரையின் ஒரு பகுதி உடைந்து சேதம் ! (படங்கள்)


சேதமடைந்துள்ள தரையின் ஒரு பகுதி


சேதமடைந்துள்ள சுவர் பகுதி


கீழக்கரையில் கடந்த சில மாதங்களுக்கு 5 கோடிக்கு மேற்பட்ட பட்ஜெட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கடற்கரை ஜெட்டி பாலத்தின் ஒரு பகுயில் தரை பகுதி உடைந்து சேதமடைந்துள்ளதோடு சிறிய அளவில் விரிசலும் காணப்படுகிறது.மேலும் பாலத்தையோட்டு அலைகளின் தடுப்புக்காக சுற்றிலு கட்டப்பட்டுள்ள சுவர் பகுதியும் உடைந்து காணப்படுகிறது. சில மாதங்களிலேயே உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் உள்ளோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கூறுகையில் ,

பழைய பாலம் பழுதடைந்தினால் இப்பாலம் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது ஆனால் சில மாதஙக்ளிலேயே இது போன்று உடைப்பு ஏறுபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்திகிறது மேலும் சுற்றுப்புற சுவரும் சேதமடைந்துள்ளது.உடனடியாக சமபந்தபட்டவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசாங்கம் சிறிய உடைப்புதானே என்று அலட்சியப்படுத்தாமல் உடனடியாக தொழில் நுட்ப நிபுணர்களை கொண்டு கடற்பாலத்தை என்று மறு ஆய்வு செய்ய வேண்டும்.இத்தனை கோடி செலவழித்து கட்டப்பட்ட பாலம் சில மாதங்களிலேயே பழுதடைந்தது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. adhukuullayah? PALATHAI kattyavarhalukku virudhu vazhangi gowravikka veandum kalveattuhalil avarhalin payearai eazhudhi puhalaveandum

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.