Thursday, April 12, 2012

இஸ்லாமியா பள்ளியில் மழலை மாணவ,மாணவியருக்கு பட்டமளிப்பு விழா!


உயர்நிலை பள்ளி மாணவ,மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு பாராட்டி பரிசளிக்கப்பட்டது


கீழக்கரை தெற்குத்தெரு இஸ்லாமியா உயர் நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சென்ற ஆண்டு பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவியருக்கு பட்டம் வழங்கும் விழா மற்றும் எல்கேஜி,யூகேஜி ,வகுப்பை நிறைவு செய்து 1ம் வகுப்புக்கு செல்லும் பிஞ்சு குழந்தைகளை ஊக்கப்படுத்து வகையில் அவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் தலைமை வகித்தார்.பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ வரவேற்றார்.மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸடிஸ் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் ஜே.எம்1 நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் கலந்து கொண்டு பரிசு மற்றும் பட்டம் வழங்கி பாராட்டினர்.கேஜி மூத்த ஆசிரியர் ராமலதா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் முகம்மது காசிம் மற்றும் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.