Sunday, April 1, 2012

துபாய் ஈடிஏ விடுதியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!(படங்கள்)




தகவல் :யாசர் அரபாத்

புவி வெப்பமாதல் குறித்து விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி துபாய் ஈடிஏ எம் அன்ட் ஈ தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே புவி வெப்பமயமாதல் என்கிறோம். கடந்த நூறு ஆண்டுகளில் புவியின் வெப்பம் 1.5 பாரன்ஹீட் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாசில்லா உலகத்தை உருவாக்க சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களை உருவாக்க வேண்டும். காடுகளை அழிவில் இருந்து காக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதாக இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துபாய் ETAMNE HRM கேம்ப் ல் ஒரு மணி நேரத்துக்கு (இரவு 8.30 - 9.30 ) மின் துண்டிப்பு ஏற்படுத்த பட்டது அந்நேரம் வெறும் மெழுகுவர்த்தி கொண்டு ETAHRM CAMPS 60 EARTH HOUR - 2012 என்று உருவாக்கப்பட்டது .அங்கு தங்கி இருக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஏராளமானோர் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.