Sunday, April 8, 2012

கீழக்கரையில் 50க்கு மேற்பட்டோர் பயன்பெற்ற இலவச மருத்துவ முகாம் !




கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு தெரு கிளையும் ,ஆயிஷா கிளினிக்கும் இணைந்து நடத்திய‌ "ஆஸ்துமா விழிப்புணர்வு' மருத்துவ முகாம் இஸ்லாமியா பள்ளி எதிரில் உள்ள ஆயிஷா கிளினிக்கில் நடைபெற்றது.

த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜ‌மாத் மாநில‌ செய‌லாளர் அப்துல் ஹ‌மீது த‌லைமை வ‌கித்தார்.மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் அனீஸ் ர‌ஹ்மான் முன்னிலை வ‌கித்தார்.க‌லீல் வ‌ர‌வேற்று முகாமை துவ‌க்கி வைத்தார்.

முன்னாள் நகராட்சி தலைவர் டாக்ட‌ர் ந‌ஸீரா ப‌ர்வீன் ம‌ற்றும் ஆயிஷா ப‌ர்வீன் ஆகியோர் பொதும‌க்க‌ளுக்கு ப‌ரிசோத‌னை செய்த‌ன‌ர். இதில் 50க்கும் மேற்ப‌ட்ட‌ சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட்ட‌து.ஏற்பாடுக‌ளை த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜ‌மாத் கிழ‌க்குத்தெரு கிளை நிர்வாகிக‌ள் செய்திருந்த‌ன‌ர்.

1 comment:

  1. இது போல பொது நல காரியங்கள், ஊருக்கு ஆரோகியமான விஷயங்கள் மென்மேலும் செய்ய தொண்டு அமைப்புகளுக்கு என் வாழ்த்துக்கள். எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.