பட விளக்கம் :-நகராட்சி ஊழியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி நடைபெறுகிறது
கீழக்கரை நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வருகின்ற ஏப் 24 முதல் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி நகராட்சி கமிஷனர் முஜிப் ரஹ்மான் உத்தரவின் பேரில் நகராட்சி மேற்பார்வையாளர் கார்த்திக் தலைமையில் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன் பெல் நிறுவன ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து கமிஷனர் முஜிப்ரஹமான் கூறியதாவது
,
வரும் 24 முதல் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.பொது மக்கள் கணக்கெடுக்க வரும் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமான சந்தேகங்களுக்கு 04567 244317 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.