Saturday, April 28, 2012

கீழக்கரையில் இலவசமாக +2வரை தமிழக அரசின் பள்ளி கல்வியுடன் மார்க்க கல்வி ! 30-ஏப் விண்ணப்பம் விநியோகம்!




ஹமீதியா அரபி & எஜுகேசனல் கல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஹமீதியா அரபி & எஜுகேசனல் கல்லூரியில் உலக கல்வியுடன் இணைந்த இஸ்லாமிய மார்க்க கல்வி என்ற அடிப்படையில் மெளலவி- ஆலிம் பட்டப்படிப்புகளோடு கூடிய தமிழக அரசின் 8 முதல் +2 வரையிலான தமிழக அரசின் கல்வி ,ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை இங்கு எவ்வித கட்டணமுமின்றி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது .

மேலும் பள்ளி சீருடை ,பாட புத்தகங்கள் ,எழுது கோல் சாதனங்கள் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது .

வீட்டிலிருந்து வருவதற்கு வாகன வசதியும் வழங்கப்படுகிறது.

சேருவதற்கான தகுதிகள் : -

1,குர் ஆனை பார்த்து ஓத தெரிந்திருக்க வேண்டும்
2.குறைந்த் பட்சம் 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
மேலும் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களும் சேர்ந்து பயிலலாம்


விண்ணப்பம் வினியோக நாள் : 30-04-12

விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள் : 20-05-12

நேர்முகதேர்வு: 26-05-12

கல்லூரி துவங்கும் நாள் : 06-06-12


விண்ணப்பம் கிடைக்குமிடம் :- எஸ். அப்பாஸ் அலி ஆலிம்
மொபைல் : 94438053225
99420 55372
நூற்றுக்கு மேற்பட்டோர் பயின்று வரும் இப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட கீழக்கரையை சேர்ந்த மாணவர்கள் ஆலிம்களாக உருவாக உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.