Monday, April 2, 2012

கீழக்கரையில் ராணுவ பாதுகாப்பு கழகம் இணைந்து தேசிய அளவிளான‌ கருத்தரங்கம்!


பட விளக்கம்:-மதுரை ரகசிய தகவல் பரிமாற்று துறை வல்லுனர் டாக்டர் இந்திரா தேவி ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட கல்லூரி இயக்குநர் ஹபீப் பெற்றுகொண்டார்

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கணிதத்துறை மற்றும் இந்திய ராணுவ பாதுகாப்பு கழகம் நடத்திய ஆராய்ச்சி கழகம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூர் வளாகத்தில் நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை தாங்கினார்.கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

துறை தலைவர் கார்த்திக்கேயன் வரவேற்றார்.
இதில் மதுரை ரகசிய தகவல் பரிமாற்று துறை வல்லுனர் டாக்டர் இந்திரா தேவி கலந்து கொண்டு கணிணியில் தகவல்களை பாதுகாப்பாக அனுப்புவது குறித்து பேசினார்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை பொறியியல் பட்ட மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர்.சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பபட்டது.பேராசிரியர் சேக் யூசுப் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் மற்றும் பல் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.