Thursday, April 11, 2013

கீழ‌க்க‌ரை அருகே க‌டற்க‌ரையில் இற‌ந்த‌ நிலையில் டால்பின் !



கீழ‌க்க‌ரை அருகே தோப்பு வ‌ல‌சை க‌ட‌ற்க‌ரையில் டால்பின் மீன் இற‌ந்த‌ நிலையில் க‌ரை ஒதுங்கிய‌து.


தோப்பு வ‌ல‌சை க‌ட‌ற்க‌ரையில் 2மீட்ட‌ர் நீள‌மும் 1 மீட்ட‌ர் சுற்ற‌ள‌வும் சுமார் 40 கிலோவுக்கும் மேல் அதிக‌ எடை கொண்ட‌‌ டால்பின் வாய் ப‌குதியில் காய‌த்துட‌ன் உயிர‌ழ‌ந்து கிட‌ந்த‌து.உட‌ன‌டியாக‌ வ‌ன‌த்துறையின‌ருக்கு த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.அப்ப‌குதியை சேர்ந்த‌ சிறுவ‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் அங்கு குவிந்த‌ன‌ர்.

இது குறித்து அங்கு வ‌ந்து பார்வையிட்ட‌ வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறிய‌தாவது, இந்த‌ டால்பின் க‌ட‌லில் ‌துள்ளி குதிக்கையில் பாறைக‌ளில் மோதி இறந்து இருக்க‌லாம் என‌ தெரிவித்தார்.


இற‌ந்த‌ டால்பின் மீனை ரெகுநாத‌புர‌ம் கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் சித்தி ஹ‌ர்ஜிதா பிரேத‌ ப‌ரிசோத‌னை செய்தார்.பின்ன‌ர் ப‌ள்ள‌ம் தோண்டி புதைக்க‌ப்ப‌ட்ட‌து.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.