Tuesday, April 16, 2013

கீழ‌க்க‌ரையில் முன்விரோத‌த்தால் தாக்குத‌ல்!4 பேர் கைது!



500பிளாட் பகுதி முஹம்மது அஸ்லம் மகன் ஹமீது(30)த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

சென்ற‌ மாத‌ம் கீழக்கரையை சேர்ந்த‌ அபுல்ஹசன்(18), முஹம்மது ஜமாலுதீன்(18), முஹம்மது ஆசிப்(18),பாரூக் மரைக்கா(18), அஜ்மீர்(18), தமீமுல் அன்சாரி(18). நண்பர்களான இவர்கள்  500பிளாட் பகுதியில் செல்லும் பெண்களை கேலி செய்த‌னராம்.இதை அதே பகுதியைச் சேர்ந்த முஹம்மது அஸ்லம் மகன் ஹமீது(30) என்பவர் அந்த இளைஞர்களை கண்டித்துள்ளார்.இதனால் இருத‌ர‌ப்புக்கும் முன் விரோத‌ம் இருந்து வ‌ந்துள்ள‌து.

இத‌னால் ஏற்ப‌ட்ட முன்விரோத‌த்தால்   ஹமீதுவை இளைஞர்கள் 6பேரும் வழி மறித்து தாக்கினர். இதில் காயமடைந்த ஹமீது கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது சம்ப‌ந்தமாக ஹமீது கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 4இளைஞர்களை கைது செய்தனர். அஜ்மீர்,தமீமுல் அன்சாரி ஆகிய இருவரை தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.