Tuesday, April 23, 2013

கீழ‌க்க‌ரை இன்ஸ்பெக்டர் க‌னேச‌ன் உள்ளிட்ட காவ‌ல்துறை அதிகாரிக‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ மாவ‌ட்ட‌ எஸ்.பியிட‌ம் எஸ்.டி.பி.ஐ சார்பில் புகார்!



 கீழ‌க்க‌ரை போலீசாரால் ப‌திவு செய்ய‌ப‌ட்டுள்ள‌ கொலை வ‌ழ‌க்கு ஒன்றில் எஸ்.டி.பி.ஐ  ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொகுதி த‌லைவ‌ர் அப்பாஸ் ஆலிமை உண்மைக்கு புற‌ம்பாக‌ இணைத்துள்ள‌தாக‌வும் இதை செய‌ல்ப‌டுத்திய‌ கீழ‌க்க‌ரை இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் உள்ளிட்ட‌ காவ‌ல்துறை அதிகாரிக‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்தியும்,வ‌ழ‌க்கிலிருந்து அப்பாஸ் ஆலிம் பெய‌ரை நீக்க‌ கோரியும் எஸ்.டி.பி.ஐ சார்பில் நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் ராமநாத‌புர‌ம் காவ‌ல்துறை எஸ்.பி ம‌யில்வாக‌ண‌னிட‌ம் புகார‌ளித்த‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன்
 
 
புகாரை பெற்று கொண்ட‌ காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர் இது குறித்து உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தாக‌ உறுதிய‌ளித்தார்.
 
இது குறித்து அப்பாஸ் ஆலிம் கூறிய‌தாவது,

கீழ‌க்க‌ரை போலீசாரால் போடப்ப‌ட்டுள்ள‌ கொலை வழ‌க்கில் பொய்யாக‌ என் பெய‌ர் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌த‌ற்கு உள்ளூரை சேர்ந்த‌ சில‌ ச‌க்திக‌ளும் காரண‌மாக‌ இருக்க‌லாம் என‌ கருதுகிறேன்.இச்செய‌லுக்கு இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் உள்ளிட்டோர் உட‌ந்தை.இவ‌ர்க‌ளுக்கு எஸ்டிபிஐ அனைத்து ச‌மூக‌ ம‌க்க‌ளிட‌மும் ந‌ற்பெய‌ர் எடுத்து வ‌ருவ‌து பிடிக்க‌வில்லை.ந‌ற்பெய‌ரை கெடுக்கும் நோக்க‌த்தில் இது போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகிறார்க‌ள்.மேலும் கீழ‌க்க‌ரை போலீசாரால் போட‌ப்ப‌ட்டுள்ள‌ கொலை வ‌ழ‌க்கில் பொய்யாக‌ அப்பாவிக‌ள் மீது வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.கீழ‌க்க‌ரை போலீசாரின் விசார‌ணை மீது ந‌ம்பிக்கையில்லை.இது தொட‌ர்பான‌ விசார‌ணையை சிபிஐயிட‌ம் ஒப்ப‌டைக்க‌ வேண்டும் என்றார்.

 

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.