Tuesday, April 2, 2013

கீழக்கரையில் துப்பாக்கி வைத்திருந்த இருவரிடம் போலீஸார் விசாரணை!


  கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த  செய்யது இஸ்ஹாக்கான் (20), கிழக்குத் தெருவைச் சேர்ந்த  ஹமீதுகான்(21). இருவரும் துப்பாக்கி வைத்திருப்பதாகப் போலீஸாருக்கு தக‌வ‌ல் கிடைத்தது.

  உடனே கீழக்கரை காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் போலீஸார்  சென்று இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர்.

  அப்போது இருவரும் உரிமம் தேவையில்லாத சிறிய ரக(வேட்டைக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும்) துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிய வந்தது.
  இதைத் தொடர்ந்து இருவரையும் ராமநாதபுரம் வருவாய் அலுவலர் லாரன்ஸ் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர்.

  பின்னர் இருவரிடமும் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டு திருப்பி அனுப்ப‌ட்ட‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.