Saturday, April 13, 2013

கீழ‌க்க‌ரையில் 350க்கும் மேற்ப‌ட்ட‌ மாண‌வ‌,மாண‌விய‌ர் ரத்தான‌ம்!


ராமநாதபுரம்மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம்,அரசு மருத்துவமனை மறறும் மீனாட்சி மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய இலவச இரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார் இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார் திட்டஅலுவலர் சிவபாலன் வரவேற்றார் இதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் ரவி தலைமையில் குழுவினர் கலந்து கொண்டு இரத்தம் சேகரித்தனர்

இம்முகாமில் 350க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு இரத்ததான செய்தனர் இறுதியில் திட்டஅலுவலர் முத்தவேல் நன்றி கூறினார் இவ்விழாவில் பேராசிரியர்கள் கார்த்திகேயன்,முகம்மதுரபி,சேக்யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.