Thursday, April 11, 2013

கீழ‌க்க‌ரையில் 2கிலோ க‌ஞ்சா ப‌றிமுத‌ல்!ஒருவ‌ர் கைது!


கீழ‌க்க‌ரை போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை ஏர்வாடி முக்கு ரோட்டில் கீழ‌க்க‌ரை கீழ‌க்க‌ரை போலீஸ் எஸ்.ஐ கோட்ட‌ச்சாமி த‌லைமையில் வாக‌ன‌ ப‌ரிசோத‌னையில் ஈடுப‌ட்ட‌ போது

ராம‌நாத‌புர‌த்திலிருந்து கீழ‌க்க‌ரை நோக்கி வ‌ந்த‌ ஆட்டோ ஒன்று போலீசாரை க‌ண்ட‌தும் வேறு ஒரு பாதையில் திரும்பிய‌து போலீசார் ம‌ற்றொரு பாதை வ‌ழியாக‌ சென்று ஆட்டோவை ம‌றித்த‌ சோதனை செய்த‌ போது 2 கிலோ எடையுள்ள‌ க‌ஞ்சாவை‌ விட்டு விட்டு ஆட்டோவில் இருந்த கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌‌ சாஹீல் ஹ‌மீது(32) என்ப‌வ‌ர் த‌ப்பி ஓடினார்.

ஆட்டோவை ஓட்டி வ‌ந்த‌ ராம‌நாத‌புர‌ம் பேராவூரை சேர்ந்த‌ முனிய‌சாமியை(23) கைது செய்து 2 கிலோ க‌ஞ்சாவையும்,ஆட்டோவையும் ப‌றிமுத‌ல் செய்த‌ன‌ர். த‌ப்பி ஓடிய‌ சாஹுல் ஹ‌மீதை தேடி வருகின்ற‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.