Thursday, April 25, 2013

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையோட்டி அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌ மாண‌வ‌,மாண‌விய‌ருக்கு விருது!


திருப்புல்லாணி வட்டார அம்பேத்கர் இளைஞர் பேரவையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா கீழக்கரை தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
 
ஒருங்கிணைப்பாளர் ரகுமான் வரவேற்றார். அற்புத குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் சேக் இபுராகிம், எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராமையா முன்னிலை வகித்தார்.
இதில் அனைத்து பள்ளிகளிலும் 11ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களிலும், வங்கியில் கல்வி கடன் வழங்குவதிலும் தனியார் துறை வேலைவாய்ப்பிலும், ஆசிரியர் தகுதி தேர்விலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
 ஏற்பாடுகளை ராஜேஸ், அருண்விஜயகுமார் செய்திருந்தனர், ஒருங்கிணைப்பாளர் சூரன் நன்றி கூறினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.