Friday, April 5, 2013

தெற்கு தெரு க‌ழிவு நீர் குழாய் சீர‌மைப்பு ப‌ணியை விரைந்து முடிக்க‌ கோரிக்கை!


கீழக்கரை தெற்குத்தெரு பகுதியில் க‌ழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பள்ளி மாணவர்களுக்கும்,மசூதி மற்றும் பெண்கள் மசூதி ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் ந‌க‌ராட்சிக்கு கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சி நிர்வாக‌ம் அப்பகுதியில் அடைப்புக‌ளை ச‌ரி செய்து புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ 4 இன்ச் அள‌வுள்ள‌ கழிவுநீர் குழாய்களை அக‌ற்றி விட்டு 8 இன்ச் பெரிய கழிவுநீர் குழாய்கள் அமைப்ப‌த‌ற்கு கடந்த சில தினங்களாக ஜெசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு ப‌ணிக‌ள் நடைபெற்று வந்த‌ன‌ .


இதனிடையே வியாழக்கிழமை தனியார் பள்ளி வாகனம் கழிவுநீர் குழாய்க்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இற‌ங்கி சிக்கிய‌து.உட‌ன‌டியாக‌ மாணவர்கள் பாதுகாப்பாக‌ வாக‌னத்திலிருந்து கீழிற‌க்க‌ப்ப‌ட்டு அழைத்து செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். வேன் சிக்கிய‌தால் அப்ப‌குதியில் போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ஏற்ப‌ட்ட‌து.

இது குறித்து தெற்குத்தெருவைச் சேர்ந்த முசம்மில் கூறியதாவது,
தெற்குத்தெரு பகுதியில் கழிவுநீர் குழாய் விரிவுபடுத்தும் பணியை கூடுதல் பணியாளர்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் இப்பணிகளை செய்தால் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் இதுபோன்ற அசம்பாவிதங்களும் ஏற்படாது என்று கூறினார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ரிட‌ம் கேட்ட‌ போது,
இப்பிர‌ச்ச‌னையின் அவ‌சிய‌ம் க‌ருதி ப‌ணிக‌ள் விரைவாக‌ ந‌டைபெற்ற‌து.த‌ற்போது ந‌டைபெறும் ப‌ணிக‌ளால் ப‌ள்ளி மாண‌வ‌,மாண‌விக‌ளுக்கு சிர‌ம‌ம் ஏற்ப‌டும் என‌ க‌ருதி ப‌ணிக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு விட்ட‌து.தோண்ட‌ப்ப‌ட்ட‌ குழிக‌ளையும்  மூட‌ சொல்லி விட்டேன் ப‌ள்ளி விடுமுறை தொட‌ங்கிய‌வுட‌ன் ப‌ணிக‌ள் விரைந்து முடிக்க‌ப்ப‌டும் என்றார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.