Thursday, April 4, 2013

இந்திய‌ மாண‌வ‌ர்க‌ள் க‌டின உழைப்பாளிக‌ள்!கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரி விழாவில் அமெரிக்க‌ தூத‌ர‌க‌ அதிகாரி பேச்சு!






கீழக்கரை பொறியியல் கல்லூரியில் நிறுவனர் நினைவு தினவிழா ந‌டைபெற்ற‌து.
இவ்விழாவிற்கு முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் நந்தகுமார்,ராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணை தலைவர் ராமசுப்ரமணி,கல்லூரி இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா,அறக்கட்டளை உறுப்பினர் ஹமீது இபுராஹீம் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பொறியியல் கல்லூரரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் வரவேற்புரையாற்றினார். முஹம்மது சதக் அறக்கட்டளை உறுப்பினர் சர்மிளா கல்லூரி குறித்த அறிக்கையை வாசித்தார் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி அமெரரிக்க தூதரக அதிகாரியின் பேச்சை மொழிபெயர்த்தார்.  
இதில் அமெரிக்க தூதரக அதிகாரி மெக் இன்டைய‌ர் பேசியதாவது,

 21ம் நூற்றாண்டில் இந்தியா அமெரிக்கா ஆகிய‌ இரு தூண்க‌ளும் இணைந்து ஒவ்வொரு ம‌னித‌ருக்குள்ளும் ந‌ட்புண‌ர்வை ஏற்ப‌டுத்தும் சிற‌ப்பான‌ க‌ல்வியை அளித்து வ‌ருகிற‌து.
கல்வியில் உலகஅளவில் முதலிடத்தை நோக்கி இந்தியா அபார வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவின் அந்த கனவு விரைவில் நிறைவேறும். இந்திய அளவில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி மற்றும் அறிவியல் கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலமாக விளங்கி வருகிறது. கல்வி வளர்ச்சியில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்களின் கடின உழைப்பு அவர்களை உயர செய்கிறது. தரமான கல்வி தான் மாணவர்களின் எதிர்கால வாழ்வை வழி நடத்தும். இந்திய மாணவர்கள் அமெரிக்காவிற்கும்,அமெரிக்கா மாணவர்கள் இந்தியாவிற்கும் பெருமளவில் வருகை தந்து உயர்கல்வி கற்று வருகின்றனர். இந்திய மாணவர்கள் கற்கும் கல்வி அவர்களது கிராமபுறங்களை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும்.
தற்போது அமெரிக்காவில் 1லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில் இந்த முஹ‌ம்ம‌து ச‌த‌க் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் பலர் உள்ளனர். அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு வரும் இந்திய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தாமதமின்றி வழங்கப்படும்.

கல்வி வளர்ச்சிக்காக அமெரிக்க அரசு அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் பல லட்சம் மில்லியன் டாலர்களை செலவு செய்து வரருகிறது. இந்திய ஆசிரியர்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கல்வி,மருத்துவம்,சுற்றுலாவிற்காக 8 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியா வருகின்றனர்.  2009ல் அமெரிக்க ஜ‌னாதிப‌தி ஒபாமா ம‌ற்றும் இந்திய‌ பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங் ஆகியோர் த‌ங்க‌ள் நாடுக‌ளின் எல்லா துறைக‌ளிலும் க‌ருத்து ப‌றிமாற்ற‌ம் க‌ல்வித்துறையில் ஒருவ‌ருக்கொருவ‌ர் ஒத்துழைட்து கொள்வ‌து என்ற‌ ஒப்ப‌ந்த‌ம் செய்து கொண்ட‌த‌ன் அடிப்ப‌டையில் என‌ர்ஜி,ச‌மூக‌ மேம்பாடு,சுற்றுசூழ‌ல்,க‌ல்வி,பொது சுகாதார‌ம் ,புதிய‌ க‌ண்டுபிப்புக‌ள் ஆகிய‌வ‌கைக‌ளுக்காக‌ 5 மில்லிய‌ன் டால‌ர் வழ‌ங்க‌ப்ப‌டும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்ன‌ர் முத‌ல்க‌ட்ட‌மாக‌ தென்னிந்தியாவை சேர்ந்த‌ 8 க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு உத‌வி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.ந‌ட‌ப்பாண்டில் முஹ‌ம்ம‌து ச‌த‌க் க‌ல்லூரி உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள்  ஓ எஸ் ஐ திட்ட‌த்தின் கீழ் நிதி பெற‌ விண்ண‌ப்பிக்க‌லாம்.

பின்தங்கிய கீழக்கரை போன்ற சிறிய நகரத்தில் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களை நிறுவி கல்வி சேவையை அளித்து வரும் முஹம்மதுசதக் அறக்கட்டளையின் பணி பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார். 
பின்னர் பல்கலைக் கழக அளவிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கு அமெரிக்க தூதரக அதிகாரி பரிசுகளை வழங்கினர். இறுதியில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜிமுதீன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்  செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.