Friday, April 19, 2013

தேசிய‌ அள‌விலான‌ போட்டியில் கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர் முத‌லிட‌ம்!

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் தேசிய அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல்துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மதுமிதன் வினாடிவினா போட்டியில் முதல்பரிசை வென்றார்.

பரிசு பெற்ற மாணவரை கல்லூரி தலைவர் ஹமீது அப்துல்காதர்,தாளாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா,முதல்வர் முஹம்மது ஜஹாபர் மற்றும் துறைத்தலைவர் கார்த்திகேயன்,பேராசிரியர் யூசுப் ஆகியோர் பாராட்டினர். 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.