Thursday, April 11, 2013

ராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் க‌ட‌ல்நீரை குடிநீராக்கும் நிலைய‌ங்க‌ள்!முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா அறிவிப்பு!




முதல்-அமைச்சர் ஜெயலலிதா  சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை உயர்ந்த அளவில் நிறைவேற்றிக் கொடுப்பதும், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும் உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமை என்றாலும், மாநில அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது.

இதனை உணர்ந்த எனது தலைமையிலான அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துவதிலும், பொது சுகாதாரத்தை பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் எனது ஆட்சிக் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 3.80 மில்லியன் லிட்டர் குடிநீரை பெறமுடியும்.

இதேபோன்று, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் வடிவமைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் உள்ளூர் நீராதாரங்களின் தரமும், நம்பகத்தன்மையும் தற்போது குறைந்து வருவதால், இம்மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நிரந்தரத் தீர்வு காணவேண்டியது அவசியமாகிறது.

எனவே, சென்னை மாநகரத்தின் நீர்த் தேவையை சமாளிக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததுபோல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிலவும் நிலத்தடி நீரின் நிலையற்ற தன்மை மற்றும் குடிநீர் தர பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலங்களிலும் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்


கீழக்க‌ரை க‌ட‌ல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும் என‌ கீழ‌க்க‌ரை டைம்ஸ் இணைய‌த‌ள‌த்தில் செய்தி வெளியிட‌ப்ப‌ட்டிருந்த‌து.

பார்க்க‌ ...  http://keelakaraitimes.blogspot.ae/2013/03/blog-post_11.html

இது தொட‌ர்பாக‌ த‌மிழ‌க‌ அர‌சிட‌ம் கோரிக்கை வைத்துள்ளதாக‌ ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ நிருப‌ர்க‌ளிட‌ம் தெரிவித்திருந்தார்.

பார்க்க‌ ...  http://keelakaraitimes.blogspot.ae/2013/04/blog-post_6.html

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌ட‌லோர‌ ஊர்க‌ளின் நீண்ட கால‌ கோரிக்கையான‌ க‌ட‌ல்நீரை குடிநீராக்கும் திட்ட‌ம் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌‌ வேக‌த்தோடு உட‌ன‌டியாக‌ செய‌ல‌ப‌டுத்த‌ப்ப‌டுமானால் க‌ட‌லோர‌ ஊர்க‌ளான‌ கீழ‌க்க‌ரை,பெரிய‌ப்ப‌ட்டிண‌ம், ம‌ற்றும் அருகிலுள்ள‌ ஊர்க‌ளுக்கு  மிகுந்த‌ ப‌ய‌ன‌ளிக்கும் என்று ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.