Tuesday, April 9, 2013

கீழ‌க்க‌ரையில் அ.தி.மு.க‌ சார்பில் த‌ண்ணீர் ம‌ற்றும் நீர் மோர் ப‌ந்த‌ல் திற‌ப்பு!



 இவ்விழாவிற்கு  நகர் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சுல்தான் செய்யது இபுராஹீம் தலைமை வகித்தார்.

மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முனியசாமி,நகர் செயலாளர் ராஜேந்திரன்,நகர்மன்ற துணை தலைவர் ஹாஜா முகைதீன்,சிறுபாண்மை பிரிவின் ந‌க‌ர் செய‌லாள‌ர் யாசீன்,விவ‌சாய‌ அணி செய‌லாள‌ர் பாரூக்,நகர் மாணவரணி செயலாளர் சுரேஸ்,நகர் துணைசெயலாளர் குமரன்,நகர் அம்மா பேரவை செயலாளர் சரவணபாலாஜி,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் செல்வகணேஸ்,நகர் எம்ஜிஆர் துணை செயலாளர் சங்கர் கணேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் சதன் பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.

நீர் மோர் பந்தலை மாநில இளைஞரணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். 

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ்,சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா,மாவட்ட செயலாளர் முனியசாமி,முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் முஹம்மது உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இவ்விழாவில் தர்பூசனி,ஆப்பிள்,ஆரஞ்ச் போன்ற 9வகையான பழவகைகளும்,இளநீர்,மோர்,சர்பத் போன்ற குளிர்பானங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக காஞ்சிரங்குடி,இதம்பாடல்,ஏர்வாடி ஆகிய பகுதிகளிலிருந்து 32 உலமாபெருமக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக பிரார்த்தனை செய்தனர்.

மேலும் வானவேடிக்கைகள்,தாரைதப்பட்டை,குதிரை நடனம் ஆகியவைகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் எஸ்.டி. அர‌சு,லியாக‌த்கான்,க‌வுன்சில‌ர் சுரேஷ் பாவா க‌ருணை நகர்மன்ற உறுப்பினர்கள் மீனாள்,தங்கராஜ்,செய்யது கருணை,காஞ்சிங்குடி பக்கிரப்பா கமிட்டி தலைவர் அன்வர்,அமானுல்லா உட்பட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட பிரதிநிதி ஜகுபர்உசேன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.