Sunday, April 14, 2013

கீழ‌க்க‌ரை செய்யது முகம்ம‌து அப்பா த‌ர்ஹா நிக‌ழ்ச்சி!



கீழக்கரை மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா ஷகீது ஒலியுல்லா தர்ஹா கந்தூரி நிக‌ழ்ச்சி நேற்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.
கீழக்கரையில் உள்ள மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா ஷகீது ஒலியுல்லா தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா ந‌டைபெறும்.
இந்தாண்டு கடந்த மார்ச் 13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி 14 நாட்கள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தர்ஹா நிர்வாகி சதக்கத்துல்லா ஆலிமுசா தலைமையில் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன், அப்துல்சலாம் ஆலிம், பீர்முகம்மது ஆலிம், முத்து அபூபக்கர் சித்திக் முன்னிலையில் மவுலீது  ஓதப்பட்டு கொடியிறக்கப்பட்டது.

இதையடுத்து ஆயிரகணக்கானவர்களுக்கு நெய்சோறு வழங்கப்பட்டது, உலக ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் துஆ (பிராத்தனை) செய்யப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மக்பூல்சுல்தான், அடுமை, காசிம், பாருக், ஜலால், ஹாஜா உட்பட ஏராளமானோர் செய்திருந்தனர். ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.