Sunday, April 21, 2013

கீழ‌க்க‌ரையில் வேன் க‌விழ்ந்து 8பேர் காய‌ம்!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே கருப்பன்துறையை சேர்ந்தவர் அந்தோணி ஜான் ரீகன். குடும்பத்துடன் வேளாங்கன்னி தேவாலயத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். நெல்லை மாவட்டம் சிங்கம்பாறை முருகன், வேனை ஓட்டி வந்தார். கீழக்கரை போலீஸ் ஸ்டேஷன் அருகே இ.சி.ஆர்., ரோட்டில் அதிகாலை 3.30 மணிக்கு சென்ற போது டிரைவரின் கவனக்குறைவால் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் அந்தோணி ஜான் ரீகன் உட்பட எட்டு பேர் காயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழக்கரை எஸ்.ஐ., கோட்டைச்சாமி, வழக்குப்பதிவு செய்து, டிரைவர் முருகனை கைது செய்தார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.