Tuesday, April 9, 2013

கீழ‌க்க‌ரை அருகே காய‌த்துட‌ன் புள்ளிமான் மீட்பு!


கீழ‌க்க‌ரை அருகே காய‌த்துட‌ன் புள்ளிமான் மீட்பு!

கீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ திருப்புல்லாணி ஒன்றிய‌த்திற்குட்ப‌ட்ட‌ நைனார் மரைக்கான் ஊராட்சி எரிக‌ல‌ம்ப‌ட்டி கிராம‌த்தில் புள்ளிமான் நாயால் துர‌த்த‌ப்ப‌ட்டு காய‌த்துட‌ன் மீட்க‌ப்ப‌ட்ட‌து.

எரிக‌ல‌ம்ப‌ட்டி கிராம‌த்தை சேர்ந்த‌ பாண்டி த‌ன‌து தோட்ட‌த்தில் வேலை செய்து கொண்டிருந்த‌ போது நாய் ஒன்று புள்ளிமானை துர‌த்தி கொண்டு வ‌ந்துள்ள‌து.நாயிட‌மிருந்து த‌ப்பிப‌ப‌த‌ற்காக‌ பாண்டியின் தோட்ட‌த்திற்குள் மான் பாய்ந்த‌ போது வேலியில் சிக்கி காய‌ம் ஏற‌ப்பட்ட‌து உட‌ன‌டியாக‌  பாண்டி ஓடி சென்று மானை காப்பாற்றி ஊராட்சி த‌லைவ‌ர் வெள்ளையம்மாளுக்கு த‌க‌வ‌ல் கொடுத்தார்.அவர் அர‌சு அதிகாரிக‌ளுக்கு த‌க‌வல‌ளித்த‌த‌ன் பேரில் மான் ம‌ருத்துவ‌ம‌னை எடுத்து செல்ல‌ப்ப‌ட்டு சிகிச்சைய‌ளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிறது.வ‌ன‌த்துறையின‌ரிட‌ம் ஒப்படைக்க‌ப்ப‌ட்ட‌து

இது குறித்து வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறிய‌தாவ‌து,
 இந்த‌ மான் காட்டிலிருந்து திசை மாறிவ‌ந்த‌தா ? அல்ல‌து வேட்டைக்கார‌ர்க‌ளால் க‌ட‌த்தி வ‌ர‌ப்ப‌ட்ட‌தா ? என‌ விசார‌ணை செய்து வ‌ருகிறோம்.காய‌ம‌டைந்துள்ள‌தால் சிகிச்சைய‌ளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.சிகிச்சை முடிந்த‌வுட‌ன் காட்டில் விட‌ப்ப‌டும் என்றார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.