Friday, April 19, 2013

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு !

 
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் தகவல் தொழில் நுட்ப பரிமாற்ற கருத்தரங்கு நடந்தது.
 
கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறைத் தலைவர் ஷகீலாபானு வரவேற்றார். தகவல் பரிமாற்றத்தின் வகைகள் பற்றியும், வெற்றிகரமான தகவல் பரிமாற்றம் எவ்வாறு அமைகிறது என்பது குறித்தும் தூத்துக்குடி மனநல வளர்ச்சி பொறியியல் நிறுவன இயக்குநர் கணேஷ் ராமசந்திரன் பேசினார், பேராசிரியர் பிரான்சிஸ் நன்றி கூறினார். மக்கள் தொடர்பு அலுவலர் நஜிமுதீன், பேராசிரியைகள் சத்தியவதி, யாஸ்மின், ரேகா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.