Tuesday, November 29, 2011

கீழக்கரையில் 3ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்படும் ! ரோட்டரி சங்கம் உறுதி


கீழக்கரை ரோட்டரி மாவட்டம் சார்பாக மரக்கன்று நடும் விழா கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர் செய்யது இப்ராகிம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர் சாதிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் விழாவை துவங்கி வைத்தார் மேலும் பட்டய தலைவர் அலாவுதீன்,செய்லாளர் பாலசுப்பிரமணியன்,மூர் ஹசனுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் செய்யது இப்ராகிம் கூறியதாவது. இந்த வருடம் ரோட்டரி மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 11 மரக்கன்றுகள் நட வேண்டும் என மாவட்ட ஆளுநர் ஆறுமுக பாண்டியன் உத்தரவிட்டதை தொடர்ந்து கீழக்கரையில் மட்டும் 3 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை 1000த்துக்கு மேல் கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ராசிக் கூறுகையில், மரம் வளர்ப்போம் ,மழையை வரவழைப்போம் என்று சொல்வார்கள் இவர்களின் பணி பாராட்டுக்குறியது அதே நேரத்தில் மரக்கன்றுகளை நடுவதோடு இல்லாமல் அதை முறையாக பராமரித்து முழுமையாக வளர்ச்சியடைய செய்வதற்கு முழுமையாக முடியா விட்டாலும் ஓரளரவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.