Thursday, November 17, 2011

நவ 21ல் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை கீழக்கரை வழியாக ராமநாதபுரம் வருகை




பாப‌ரி ம‌ஸ்ஜிதை மீட்க‌ கோரி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் விழிப்புணர்வு ரத யாத்திரை வரும் நவம்பர் 19ஆம் தேதி மேலப்பாளையத்திலிருந்து துவங்கி டிசம்பர் 6ஆம் தேதி சென்னையை அடைய இருக்கிறது.

இது குறித்து கீழக்கரை ஜமீல் கூறுகையில் ,
தமிழகம் முழுவதும் சுற்றி வர இருக்கும் இந்த ரத யாத்திரை இன்ஷா அல்லாஹ் 21, 22ஆம் தேதிகளில் கீழக்கரை வழியாக இராமநாதபுரம் மாவட்டம் வர இருக்கிறது.

21ஆம் தேதி இராமநாதபுரம் சந்தை திடலில் மாபெரும் விளக்க பொதுக் கூட்டமும், அடுத்த நாள் 22ஆம் தொண்டி பாவோடி திடலில் விளக்கப் பொதுக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. என்ப‌தாக‌ தெரிவித்தார்

பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு ரத யாத்திரை சம்பந்தமாக பேனர்கள்,கட்வுட்கள், ஆட்டோ விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் இராமநாதபுரம் மாவட்ட‌த்தில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் செய்ய‌ப்ப‌ட்டு உள்ள‌து.

2 comments:

  1. வருத்தமில்லா வாலிபர் சங்கம்November 18, 2011 at 4:19 PM

    பாபரி மஸ்ஜிதை மீட்க வேண்டுமென்றால் அயோத்திக்கு அல்லவா ரத யாத்திரை செல்ல வேண்டும், தமிழ்நாட்டை
    சுற்றி வந்து என்ன செய்ய போகிறார்கள்...!

    ReplyDelete
  2. ஸலாம்,

    இது வரைக்கும் கீழக்கரைக்கு எதுவும் வந்த மாதிரி தெரியவில்லையே?...

    விளம்பரம் மட்டும் தானா?

    ஹூசைன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.