Sunday, November 20, 2011

நாளை கீழக்கரை நகராட்சி கூட்ட‌ம் !டெண்ட‌ர் க‌மிட்டி உள்ளிட்ட‌வை யாருக்கு ?

கீழக்கரை நகராட்சி தலைவராக‌ அதிமுக சார்பில் ராபியத்துல் காதரியா தேர்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நாளை புதியதாக பதவியேற்றுள்ள நகராட்சி நிர்வாகத்தின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.
நகராட்சி நிர்வாகத்தின் டெண்டர் கமிட்டி,அப்பாயின்ட்மெண்ட் கமிட்டி,வரி விதிப்பு கமிட்டி உள்ளிட்ட‌ பொறுப்புகளுக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கபட உள்ளனர்.

டெண்ட‌ர் க‌மிட்டி - வார்டு 1 சுரேஷ்(அதிமுக), ,

அப்பாயின்ட்மெண்ட் க‌மிட்டி - வார்டு 8 செய்யது கருனை(அதிமுக)

வ‌ரிவிதிப்பு க‌மிட்டி - வார்டு11 மீரா பானு(திமுக),வார்டு16 முகம்மது ஜரினா பேகம்(அதிமுக), வார்டு12 -சித்திக் அலி(சுயே), வார்டு6 - தங்கராஜ் (சுயே) ஆகியோர் மேற்க‌ண்ட‌ க‌மிட்டிக‌ளுக்கு உறுப்பின‌ர்க‌ளாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட‌ உள்ள‌தாக‌ த‌க‌வல்கள் தெரிவிக்கினற‌ன‌.பட்டியல் இறுதி செய்யும் போது ஒரு சில‌ மாறுதல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.