Wednesday, November 9, 2011

துபாயில் நாளை(10.11.11) தாசிம் பீவி முன்னாள் மாணவியர் பேரவை தொடக்கம்!

துபாய் வ‌ருகை த‌ந்துள்ள‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா






துபாய் : துபாயில் நாளை(10.11.11) கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியர் பேரவை துவக்க‌ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.இந்நிகழ்வில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிக‌ழ்ச்சியில் ப‌ங்கு கொள்ள‌ இந்தியாவிலிருந்து க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா இன்று அதிகாலை துபாய் வ‌ந்தார்.இது குறித்து துபாய் வந்துள்ள‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா கூறிய‌தாவ‌து,
கீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியை தலைமையிடமாக கொண்டு முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது அமீரகத்தில் உள்ள தாசிம் பீவி கல்லூரியின் முன்னாள் மாணவியர்களையும் இணைத்து செயல்பட உள்ளது.துபாயில் நாளை ஈடிஏ ஸ்டார் ஹவுஸ் 8வது தளத்தில் உள்ள‌ கூட்ட அரங்கில்( நவம்பர் 10ந்தேதி ,வியாழக்கிழமை)இரவு 8மணியளவில் "முன்னாள் மாணவியர் பேரவை - துபாய் பிரிவு" துவக்கப்பட உள்ளது.

நிச்ச‌ய‌ம் இந்த‌ பேர‌வையின் மூல‌ம் பல்வேறு ஆக்க‌ ப‌ணிக‌ளையும்,மாண‌விக‌ளின் முன்னேற்ற‌த்திற்கான‌ ப‌ல்வேறு திட்ட‌ங்க‌ளையும் செய‌ல்ப‌டுத்துவோம். முன்னாள் மாணவிக‌ளான நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கி தர வேண்டும் மேலும் உங்க‌ளின் வ‌ருகையை நாளை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன் என்றார்.

குறிப்பு :கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரியின் பயின்றவர்களுக்கு தகவல் தெரிவித்து நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.இரவு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.மேலதிக விபரங்களுக்கு 050 1877 634 மற்றும் 055 327 6861 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வருகையினை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.