Thursday, November 17, 2011

அரிதாகிய‌ முட்டுதேங்காய் விளையாட்டு !


(பழைய)பைல் ப‌ட‌ம்

கம்ப்யூட்டர் யுகத்தில் அரிதாகி போன விளையாட்டுக்களில‌ ஒன்று "முட்டு தேங்காய் பந்தயம்" என்றைழைக்கப்படும் விளையாட்டு போட்டி, இபோட்டியானது தென்னைம‌ர‌ங்க‌ள் மிகுதியாக‌ உள்ள கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற‌ ப‌குதியில் ஒரு காலத்தில் இளைஞர்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மாக‌ இருந்தது இன்று "அப்ப‌டின்னா என்ன " என்று கேட்க்கும் நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு விட்டது.

இந்த முட்டு தேங்காய் பந்தயத்தில் பங்கேற்கும் இருவர் கையில் ஆளுக்கொரு தேங்காய் வைத்து தேங்காயோடு தேங்காய் மோத செய்வர் யாருடைய தேங்காய் உடைகிறதோ அவர் தோற்றவராக கருதப்பட்டு உடைந்த தேங்காயை வெற்றிபெற்றவருக்கு கொடுத்து விட வேண்டும் என்பதாக இப்போட்டி நடைபெறும்.

இது குறித்து தேங்காய் வியாபாரி நாசர் கூறியதாவது,
இன்றைய தலைமுறையினர்ன் பெரும்பாலான விளையாட்டுக்களை வீட்டில் உட்கார்ந்து கொண்டே கம்ப்யூட்டரில் விளையாடி விடுகிறார்கள்.இது போன்ற விளையாட்டுக்களில் ஆர்வமில்லை.இவ்விளையாட்டானது சுவராசியமாக இருக்கும் தற்போது இவ்விளையாட்டு அரிதாகி விட்டது . ஆனாலும் வெகு அரிதாக ஒரு சிலர் இந்த முட்டு தேங்காய் பந்தயத்துக்காக தேங்காயை வாங்கி செல்கிறார்கள்.இந்த முட்டுதேங்காய் விளையாட்டுக்கு ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டும் தேங்காய் மூடி கடினமாக இருக்கும் உடைப்ப‌து ச‌ற்று சிர‌மம்.என‌வே இத‌ற்கான மற்ற ரக தேங்காயை விட‌ விலை ச‌ற்று கூடுத‌லாக‌ இருக்கும். மேலும் அர‌சு இந்த‌ ப‌குதியில் தென்னை விளை பொருட்க‌ளுக்கான‌ க‌ண்காட்சியை இது போன்ற‌ விளையாட்டுக‌ளை அங்கு ந‌டைபெற‌ செய்ய‌லாம் என்றார்.

2 comments:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.