Sunday, November 20, 2011

200க்கும் மேல் தெருவிளக்குகள் எரியவில்லை ! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி ?

கீழக்கரையில் உள்ள தெருக்களில் மொத்தம் சுமார் 1050 தெரு விளக்குகள் உள்ளன.இதில் 200க்கு மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாக உள்ளது.இதனால் ஒரு சில பகுதிகள் இருளில் முழ்கியுள்ளன.

இது குறித்து பாரூக் கூறுகையில் ,கீழக்கரையில் உள்ள ஒரு சில பகுதிகளில் தெரு விளக்குகள எரியததால் அப்பகுதியில் இரவில் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு பக்கம் தெரு விளக்கு எரியவில்லை இன்னொரு பக்கம் அதற்கு நேர் மாறாக ஒரு சில இடங்களில் புதியதாக பொருத்தப்பட்ட‌ ஹைமாஸ் விளக்கு பளீரென எரிந்து கொண்டிருக்கிறது அதன் அருகிலேயே அதற்கு முன்பதாக பொருத்தப்பட்ட சோடியம் விளக்கும் யாருக்கும் பலனில்லாமல் எரிந்து கொண்டிருக்கிறது.இது போல் வீணடிக்கப்படும் செயலையும் நிறுத்த வேண்டும் மேலும் தெரு விளக்குகள் எரியாதது குறித்து பல‌ முறை மக்கள் நகராட்சியில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை புதிய நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.