Monday, November 21, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 40க்கும் அதிகமானோர் ரத்ததானம் !



ப‌ட‌ விள‌க்க‌ம் : ர‌த்த‌தான‌ முகாமை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா தொட‌ங்கி வைத்தார்.ர‌த்த‌ தான‌ம் செய்ப‌வ‌ர் அவ‌ர‌து க‌ண‌வ‌ர் ரிஸ்வான்
கீழக்கரை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்குதெரு கிளை மற்றும் 500 பிளாட் கிளையும் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியது.இம்முகாமை மாவட்ட தலைவர் அணீஸ் ரஹ்மான் முன்னிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் 40க்கும் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.மேலும் 2 கிளை நிர்வாகிகளும் ,கீழக்கரை சப் இண்ஸ்பெக்டர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.