Monday, November 28, 2011

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மூவருக்கு தொழில் சார் விருது !






ப‌ட‌ விள‌க்க‌ம் :- சிறப்பாக செயல்பட்டதாக கீழக்கரை சிடிசி டிராவல்சுக்கு விருது வ‌ழ‌ங்கப்பட்டது சிடிசி சார்பாக மேலாளர் நிஜாமுதீன் விருதை பெற்று கொண்டார்





ப‌ட‌ விள‌க்க‌ம் :- பி.எஸ்.என்.எல் அலுவ‌ல‌ர் அப்துல்ச‌காப்கானுக்கு மாவ‌ட்ட‌ ஆளுந‌ர் ஆறுமுக‌ பாண்டிய‌ன் விருது வ‌ழ‌ங்கினார்





கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மூவருக்கு தொழில் சார் விருது !
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தொழில்சார் விருது வழங்கும் விழா முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர் செய்யது இபுராகிம் தலைமையிலும் பட்டய தலைவர் சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையிலும் பட்டயதலைவர் அலாவுதீன் மற்றும் செயலாளர் சுப்பிரமணியன் மண்டல துணை ஆளுநர் தினேஷ் பாபு ,மாவட்ட செயலாளர் சேக் சலீம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இவ்விழாவில் மாவ‌ட்ட‌ ஆளுந‌ர் ஆறுமுக‌ பாண்டிய‌ன் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டு பேசினார்.த‌லைவ‌ர் செய்ய‌து இப்ராகிம் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்று பேசினார். இந்நிக‌ழ்ச்சியில் சி.டி.சி டிராவல்ஸ்,பாலிடெக்னிக் க‌ல்லூரியின் ஆசிரிய‌ர் யோசுவா,கீழ‌க்க‌ரை பி.எஸ்.என்.எல் இள‌ நிலை தொலை தொட‌ர்பு அலுவ‌ல‌ர் அப்துல் வ‌காப் ஆகிய‌ மூவருக்கு த‌ங்க‌ள் துறைக‌ளில் சிற‌ப்பாக‌ ப‌ணிபுரிந்த‌த‌ற்காக‌ தொழில் சார் விருது வ‌ழ‌ங்கப்ப‌ட்டது. நிக‌ழ்ச்சி இறுதியில் ப‌ட்ட‌ய‌ த‌லைவ‌ர் அலாவுதீன் ந‌ன்றி கூறினார்.



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.