Saturday, November 26, 2011

நம்மூரப் போல வருமா ? வெளிநாட்டிலிருந்து திரும்பி உள்ளூரில் தொழில் புரிவோர் !


இந்தியன் ஸ்டோர் நடத்தி வரும் ரவூப் பாட்சா


காதர் சுல்தான்
படம் மற்றும் தகவல் : அசாருதீன் மற்றும் ஜகுபர் ஹமீது இப்ராகிம்
கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்து புரிகின்றனர்.இன்னும் ஏராளமானோர் வெளிநாடு சென்ற வண்ணம் உள்ளனர் .இவர்களில் வெளிநாட்டு பணியை விட்டு ஊர் திரும்பி கீழக்கரையிலேயே தொழில் செய்பவர்களும் உள்ளனர் அவர்கள் ரியல் எஸ்டேட்,வீட்டு உபயோக பொருட்களின் கடைகள்,கோழி இறைச்சிகடை உள்ளிட்ட பல் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் ஒரு சிலரை சந்தித்து வெளிநாட்டிலிருந்து திரும்பி உள்ளூரில் வியாபாரம் செய்வது குறித்து கேட்ட போது

சீனியப்பா ஹோட்டல் எதிரில் கடை வைத்து வியாபாரம் செய்து வரும் காதர் சுல்தான் கூறியதாவது,
நான் பல ஆண்டு காலம் குடும்பத்தை விட்டு புரிந்து வெளிநாட்டில் பணிபுரிந்தேன்.உள்ளூரிலேயே ஏன் தொழில் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த கடை தொடங்கி நடத்தி வருகிறேன்.பெரிய அளவில் வியாபாரம் இல்லாவிட்டாலும் அன்றாட தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு உள்ளது. சொர்க்கமே என்றாலும் நம்மூரப்போல வருமா என்ற கருத்துதான் என் நினைவுக்கு வருகிறது என்றார்.

வள்ளல் சீதக்கதி சாலையில் இந்தியன் ஸ்டோர் நடத்தி வரும் ரவூப் பாட்சா கூறியதாவது,
நானும் நீண்ட காலம் வெளிநாட்டில் இருந்தேன் தற்போது சொந்தமாக கடை நடத்தி வருகிறேன் சொந்தமாக தொழில் செய்வதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆண்டவன் கிருபையால் நல்லமுறையில் உள்ளூரிலேயே தொழில் செய்து வருகிறேன்.இதெல்லாம் சரிவருமா என்று கேட்டவர்கள் இன்று பாராட்டிவிட்டு செல்கிறார்கள்.சொந்த வியாபாரத்தில் தடைகற்கள் பல வரும் அவற்றையேல்லாம் கடந்து சென்றோமானால் சொந்த வியாபரத்தில் நிச்சயம் பலன் இருக்கும். வெளிநாட்டில் சம்பாத்தியத்தில் இல்லாத மன திருப்தி குறைந்த வருமானமானலும் உள்ளூரில் கிடைக்கும் பொருளாதாரத்தில் இருக்கும்.

இது குறித்து கீழ்க்கரை ஜகுபர் ஹமீது கூறுகையில் ,வெளிநாட்டில் வேலை செய்தால் தான் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று கீழக்கரையில் நம்மை அறியாமல் பின்னபட்டிருக்கும் மாயையை உடைத்தெறிந்து இளைஞர்கள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே தொழில் செய்ய முயற்சிக்க வேண்டும்.அரசாங்கமும் வெளிநாட்டில் வேலை செய்பவ்ர்களுக்கென்று நிதியை ஒதுக்கி ஊர் திரும்புபவர்களுக்கு தொழில் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். ந‌ம‌தூரில் வேளிநாட்டில்தான் வேலை செய்ய‌ வேண்டும் என்ற இப்பகுதியிலுள்ளோரின் எதிர்பார்ப்பு என்ற தங்கள் மீதுள்ள அழுத்தங்களை உடைத்தெறிந்து கீழ‌க்க‌ரையிலேயே தொழில் செய்யும் இவ‌ர்க‌ளும் ஒரு வ‌கையில் சாத‌னையாள‌ர்க‌ள்தான் என்றார்.

7 comments:

  1. could you please post some photo graphs on our town since i am living in brussels for more than four years, like new view of OJM masjid, new jetty, sea shore, appa palli, new look of seetakathi salai north street new masjid and other recent developments, if you post it will be great full for our brothers living abroad.......waiting for the newly updated gallery

    ReplyDelete
  2. மிகவும் அருமையான செய்தி !!!! வாழ்த்துக்கள் சஹோதரர்கலே !!!!
    உங்கள் ஊரில் ஏன்னகு அதிகமான நண்பர்கள் இருகிறார்கள் ......சமிபத்தில் என் நண்பருக்கு நடாதே விசயத்தை உங்களோடு பகிரிந்து கொள்ள ஆசை படுகிறேன் , விடுமுறையில் வந்தே என் நண்பர் இந்தியாவில் வேலை பார்க்க போவதாக சொன்னார் அதுவும் பல அரசு துறை வேலையின் ஏழுத்து தேர்வுக்கு ரெடியாக வந்தார் அன்னால் அவரின் பெற்றோர் அதலம் நமக்கு சரிப்பட்டு வராது, நமளுடைய மானம் , மரியாதையை எல்லாம் போய்டும் என்று சொன்னார்கள் (வெளிநாட்டில் வேலை செய்யவில்லை என்றால் ) ... என்ன கொடுமை பார்த்திர்கள ???? நம் சமுதாயத்தில் அரசு துறையில் இல்லாதது நமக்கு பல பாதிப்புகள் இருக்கிறது ....அதை ஏன் நம் முனோர்கள் சிந்திக்க மடுகிறர்கள் என்று தெரிய வில்லை .......

    என் நண்பன் எல்லாம் சொல்லிபதும் அவர்கள் கேட்பதாக இல்லை ....அவன் மீதே குற்றம் புடிதர்கள் ......பிறகு மிண்டும் மன வருத்ததுடன் வளைகுடாவில் ......இது சமிபத்தில் உங்கள் ஊரில் நடைந்த சம்பவம் !!!!!

    அவன் சொன்ன இரண்டே வரி .....என் தந்தை நினைத்து இருந்தால் நான வளைகுடாவில் இருந்து இருக்க மாட்டேன் ஆனால் இப்போது சொல்லுஹிரேன் என் பிள்ளை வளைகுடா என்ற நரகத்தில் இருகமாடன் ( இந்தியாவில் தான் வேலை பார்ப்பான் )

    ReplyDelete
  3. மிகவும் அருமையான செய்தி !!!! வாழ்த்துக்கள் சஹோதரர்கலே !!!!
    உங்கள் ஊரில் ஏன்னகு அதிகமான நண்பர்கள் இருகிறார்கள் ......சமிபத்தில் என் நண்பருக்கு நடாதே விசயத்தை உங்களோடு பகிரிந்து கொள்ள ஆசை படுகிறேன் , விடுமுறையில் வந்தே என் நண்பர் இந்தியாவில் வேலை பார்க்க போவதாக சொன்னார் அதுவும் பல அரசு துறை வேலையின் ஏழுத்து தேர்வுக்கு ரெடியாக வந்தார் அன்னால் அவரின் பெற்றோர் அதலம் நமக்கு சரிப்பட்டு வராது, நமளுடைய மானம் , மரியாதையை எல்லாம் போய்டும் என்று சொன்னார்கள் (வெளிநாட்டில் வேலை செய்யவில்லை என்றால் ) ... என்ன கொடுமை பார்த்திர்கள ???? நம் சமுதாயத்தில் அரசு துறையில் இல்லாதது நமக்கு பல பாதிப்புகள் இருக்கிறது ....அதை ஏன் நம் முனோர்கள் சிந்திக்க மடுகிறர்கள் என்று தெரிய வில்லை .......

    என் நண்பன் எல்லாம் சொல்லிபதும் அவர்கள் கேட்பதாக இல்லை ....அவன் மீதே குற்றம் புடிதர்கள் ......பிறகு மிண்டும் மன வருத்ததுடன் வளைகுடாவில் ......இது சமிபத்தில் உங்கள் ஊரில் நடைந்த சம்பவம் !!!!!

    அவன் சொன்ன இரண்டே வரி .....என் தந்தை நினைத்து இருந்தால் நான வளைகுடாவில் இருந்து இருக்க மாட்டேன் ஆனால் இப்போது சொல்லுஹிரேன் என் பிள்ளை வளைகுடா என்ற நரகத்தில் இருகமாடன் ( இந்தியாவில் தான் வேலை பார்ப்பான் )

    ReplyDelete
  4. மிகவும் அருமையான செய்தி !!!! வாழ்த்துக்கள் சஹோதரர்கலே !!!!
    உங்கள் ஊரில் ஏன்னகு அதிகமான நண்பர்கள் இருகிறார்கள் ......சமிபத்தில் என் நண்பருக்கு நடாதே விசயத்தை உங்களோடு பகிரிந்து கொள்ள ஆசை படுகிறேன் , விடுமுறையில் வந்தே என் நண்பர் இந்தியாவில் வேலை பார்க்க போவதாக சொன்னார் அதுவும் பல அரசு துறை வேலையின் ஏழுத்து தேர்வுக்கு ரெடியாக வந்தார் அன்னால் அவரின் பெற்றோர் அதலம் நமக்கு சரிப்பட்டு வராது, நமளுடைய மானம் , மரியாதையை எல்லாம் போய்டும் என்று சொன்னார்கள் (வெளிநாட்டில் வேலை செய்யவில்லை என்றால் ) ... என்ன கொடுமை பார்த்திர்கள ???? நம் சமுதாயத்தில் அரசு துறையில் இல்லாதது நமக்கு பல பாதிப்புகள் இருக்கிறது ....அதை ஏன் நம் முனோர்கள் சிந்திக்க மடுகிறர்கள் என்று தெரிய வில்லை .......

    என் நண்பன் எல்லாம் சொல்லிபதும் அவர்கள் கேட்பதாக இல்லை ....அவன் மீதே குற்றம் புடிதர்கள் ......பிறகு மிண்டும் மன வருத்ததுடன் வளைகுடாவில் ......இது சமிபத்தில் உங்கள் ஊரில் நடைந்த சம்பவம் !!!!!

    அவன் சொன்ன இரண்டே வரி .....என் தந்தை நினைத்து இருந்தால் நான வளைகுடாவில் இருந்து இருக்க மாட்டேன் ஆனால் இப்போது சொல்லுஹிரேன் என் பிள்ளை வளைகுடா என்ற நரகத்தில் இருகமாடன் ( இந்தியாவில் தான் வேலை பார்ப்பான் )

    ReplyDelete
  5. சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க

    சொர்கமே என்றாலும்
    அது நம் ஊரைப் போல வருமா?
    அட என் நாடு என்றாலும்
    அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
    தமிழ் போல் இனித்திடுமா?


    இது இப்பதான் நம்ம ஊரு மக்களுக்கு புரிஞ்சு இருக்கு போல

    ReplyDelete
  6. சஞ்சீவி பட் இன் கருத்துக்கு ....

    உங்கள் ஊரில் குடும்பத்தின் மானம் ,மரியாதை எல்லாம் வெளிநாட்டில இருக்கு ?????/

    பாவம் அந்த பையன் முயற்சி செய்து உள்ளன் !!!!
    கடைசி இரண்டு வரிகள் அருமை !!!!

    ReplyDelete
  7. சஞ்சீவி பட் இன் கருத்துக்கு ....

    உங்கள் ஊரில் குடும்பத்தின் மானம் ,மரியாதை எல்லாம் வெளிநாட்டில இருக்கு ?????/

    பாவம் அந்த பையன் முயற்சி செய்து உள்ளன் !!!!
    கடைசி இரண்டு வரிகள் அருமை !!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.