Sunday, November 13, 2011

பெரியபட்டிணத்தில் 11.11.11 அன்று பிற‌ந்த குழ‌ந்தைக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ ப‌ரிசு

பெரியபட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 11.11.11ம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு சிறப்பு பரிசாக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அரசின் திட்டத்தின் கீழ் 700 ரூபாய்க்கான காசோலையை குழந்தையின் தாய் சித்தி ரகுபியாவிடம் வழங்கினார்.

துவக்க விழா நடந்தும் உரிய அளவில் பயன்பாடுக்கு வராத‌ ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து டாக்டர் வெங்கடேஸ்வரனிடம் கேட்டறிந்தார் .முத்துப்பேட்டையிலிருந்து பெரியபட்டிணம் வரை புதிய சாலை அமைத்தல், ஆரம்ப சுகாதார நியைத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல்,நிரந்தர டாக்டர் நியமிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கபீர் மனு அளித்தார்.

2 comments:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 13, 2011 at 1:17 PM

    கீழக்கரை தாலுகா அந்தஸ்து எப்போது ? அது சம்பந்தப்ட்ட அரசு நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளது என்பதை தங்கள் நிருபர் மூலம் ஜனாப். ஜவாஹிருல்லா சாஹிப் எம்.எல்.எ, முகம் மறந்து போன திரு. ரித்தீஸ் எம்.பி ஆகியோரை பேட்டி கண்டு மக்களுக்கு தெரியப் படுத்தினால் உங்களின் பொது நலத் தொண்டிற்கு மகுடம் வைத்தது போல் இருக்கும்

    ReplyDelete
  2. தங்களின் ஆர்வத்திற்கு நன்றி ! பேட்டியை பெற முயற்சிக்கிறோம் !

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.