Thursday, August 29, 2013

சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக்குவரத்து நெரிசல்




கீழக்கரையில் பிரதான சாலைகளில் இஷ்டம்போல் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழக்கரையில் பிரதான சாலைகளில் சாலையின் இருபுறங்களிலும் ஆட்டோ,கார் மற்றும் மினி வேன்கள்,இரு சக்கர வாகனங்கள் ஆகிய வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சில வாகனங்களை நாள் கணக்கில் சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள், குறிப்பாக வங்கிகளுக்கு வரும் பெண்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

சமூக சேவகர் தங்கம் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் மட்டுமின்றி பொது மக்களும் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் காலை நேரங்களில் போலீசார் இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்

 

 

3 comments:

  1. Vallal Sitharkathir Salail (Main Road) Meega Kuriya Pathaiyaka irupathal mukku roadil irunthu kadal karai varaium roadil orathil ulla eru pakuthi idam , building ,Government kaiyakampatuthi , main roadinai eru vazhi salaiyaka (akala pathiyaka madra vendum),
    Two wheeler , Auto ,athikamaka irupathal , ullur Tax vithikalam ,(example : monthly Rs1000 for two wheeler, monthly Rs2000for auto, omeni Rs3000) madrum sila kattupatu vithikalam, Driving license illamal driving seipavarkku,Rs 5000, muthal , Rs 10000 varai aparatham vithikka vendum ithan mulam siriyavarkal athikamaka two wheeler drive pannuvathu niruthalam,
    Auto kalin ennikai kuraithu, Nagaradchimulam mini bus athikam paduthalm athil auto driverkku velai vaippu kodukalam,

    ReplyDelete
  2. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete
  3. கீழகரைல் மெயின் ரோடு மிக குறிகிய பாதையாக இருப்பதால் ,முக்கு ரோட்டில் இருந்து பைத்துல்மால் வழியாக கடல்கரை வரைம ரோடினை விரிவு படுத்த வேண்டும், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ,மெயின் ரோட்டில் வாகனம் செல்வதற்கு இடையுறாக இருக்கும் பிரவைட் பில்டிங் வீடு , வெட்று இடத்தினை நகராட்சி கையகம் படுத்தி , முக்கு ரோட்டில் இருத்து கடல் கரை வரையும் உள்ள பாதை இருவழி பாதையாக மற்ற வேண்ட்டும் ,மற்றும் மெயின் ரோட்டில் இருந்து முஸ்லிம் பஜ்சர் வழியாக அப்பா பள்ளி மற்றும் க்ஹைரதுள் ஜலாலிய ஸ்கூல் வரைம பாதைகளை விரிவு படுத்த வேண்டும் , மெயின் ரோடில் இருத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதை மிக குறிகிய பாதையாக இருப்பதால் அப்பகுதில் உள்ள பில்டிங் அரசு கையகம் படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ,
    கீழகரைல் முக்கிய பாதைகளை விரிவு படுத்துவதோடு , பள்ளி , கல்லுரி , போலீஸ் ஸ்டேஷன் , அரசு மருத்துவமனை , டெலிபோன் ஆபீஸ் , மசூதி , கோவில் , சர்ச்சு, கடல்கரை , மீன் மார்க்கெட், மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் மினி பஸ் அதிகம் அளவில் இயக்க வேண்டும் , மற்றும் 500 பிளாட் , புது கிழக்கு தெரு , மீனாட்சி புறம் , பழைய குத்பபள்ளி , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் ஆக்கிபகுதிகளை மினி பஸ் செல்லும் பாதையாக மாற்றி தர வேண்டும் ,இந்து பஜ்சர் மிக குறிகிய பாதையாக இருபதாலும் , பல வருடம் கடந்த பில்டிங்கும் மக இருப்பதால் , மார்கெட்டை அப்பகுதில் இருந்து வேறு ஓரு பகுதிக்கு மற்ற வேண்டும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.