Tuesday, February 28, 2012

ஹமீதியா ஆண்கள் பள்ளியில் சுற்று சூழல் விழிப்புணர்வு தினம்! 100 மரக்கன்றுகள் நடப்பட்டன !


கீழக்கரை முள்ளுவாடியில் உள்ள ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வு தினம் பள்ளி தாளாளர் யூசுப் சாகிப் தலைமையில் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் ஹச‌ன் இப்ராகிம் வரவேற்றார்.

ஆசிரியர் நாசர் புவி வெப்பமயமாவதால் ஏற்படும் தீங்குகள்,மற்றும் அதை தடுப்பது குறித்தும் 10ம் வகுப்பு ஆசிரியர்கள் பொது தேர்வை எவ்வாறு எதிர் கொள்வது மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் வெற்றி பெறுவதற்கு சுலபமான வழிமுறைகளை குறித்தும் பேசினார்.
முன்னதாக புவி வெப்பமடைவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட 100 மரக்கன்றுகளை தாளாளர்,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் நட்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.