Wednesday, February 15, 2012

சேது எக்ஸ்பிரஸ் தப்பியது !சென்னை அருகே தண்டவாளத்தில் விரிசல் !



விபத்தில் இருந்து தப்பிய சேது எக்ஸ்பிரஸ். அடுத்த படம்: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்படுகிறது.
மறைமலைநகர் சாமியார் கேட் அருகே நேற்று காலையில் கேங் மேன் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 6.30 மணியளவில் தண்டவாளத்தின் இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் ராமநாதபுரத்தில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், கையில் வைத்திருந்த சிவப்பு கொடியை காட்டி ரயிலை நிறுத்தி னார்.

உடனே தாம்பரம், மறைமலைநகர் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு, விரிசல் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று மதியம் 30 கி.மீ வேகத்தில் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன. மாலையில் தண்டவாளம் முழு வதுமாக சரி செய்யப்பட்டு வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன.

இதனால் தென் மாவட்டத்தில் இருந்து வந்த அனைத்து ரயில்கள், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 வாரங்க ளுக்கு முன்பு மறை மலைநகரிலேயே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட் டது குறிப்பிடத்தக் கது.
நன்றி : தினகரன்

1 comment:

  1. Indha madhiri kadamai tavaradha voozhiyargal kuraivudhan.avaroda vivegam paratta padavendiyadhe...(;;)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.